இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50105முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
'சுறா' படம் டாக்டர்: எப்படிப்பா அடிபட்டுச்சு? நோயாளி: பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க! தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்
டாக்டர்: நல்லவேளை வெளியே வந்தப்பா... இல்லைன்னா செத்திருப்ப...!!
------------------------------------------------------------- திருமணச் சான்றிதழும், கணவனும் மனைவி : என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க கணவன்: ஒண்ணுமில்ல! மனைவி : ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க! கணவன் : எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் (முடிவுத் திகதி) போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!
-------------------------------------------------------------- யார் தைரியசாலி?
யாருடைய மாணவர்கள் தைரியசாலி என்று ஒரு அமெரிக்க பிரின்சிபலுக்கும், ஒரு இந்திய பிரின்சிபலுக்கும் போட்டி வந்துவிட்டது. அமெரிக்க பிரின்சிபல் தனது மாணவரை அழைத்து, ஓடும் படகிலிருந்து கடலில் குதிக்கச் சொன்னார். தாமதிக்காமல் அவனும் குதித்தான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."
இந்திய பிரின்சிபல் தனது மாணவனை அழைத்து அதேபோல் செய்யச் சொன்னார். அவன், 'போடா லூசு' என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."
..-----------------------------------------------------------------------
பஞ்சத்திற்குக் காரணம்?
செஸ்டர்டன் என்ற எழுத்தாளர் ஒருமுறை பெர்னாட்ஷாவை சந்திக்க வந்திருந்தார். ஷா மிகவும் ஒல்லியாக இருந்தார். செஸ்டர்டன் மிகவும் உடல் பருத்து குண்டாக இருந்தார்.
செஸ்டர்டன், பெர்னாட்ஷாவைப் பார்த்து, "உங்களைப் பார்த்தால் இந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது போல் இருக்கிறது." என்று கிண்டலாக சொன்னார்.
அதற்கு அமைதியாக, "நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், உங்களைப் பார்த்தால் பஞ்சத்திற்குக் காரணமே நீங்கள்தான் என்று புரிந்து கொள்வார்கள்." என்றார்.
செஸ்டர்டன் அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லை.
-------------------------------------------------------------------------------------------
மனைவி: என் பிரசவ சமயத்திலே உங்களைக் கவனிச்சுக்க என் அம்மாவை வரவழைக்கலாமா?
கணவன்: வயசான காலத்திலே அவங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம். உன் தங்கை காலேஜ் படிப்பை முடிச்சுட்டு சும்மாத்தானே இருக்கா, அவளை வரச் சொல்லலாமே.?
|

