இன்றைய ஒளியோவியம்

Autumn Leaves.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50117
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

ஆபிரிக்காவுல ஒரு உருண்டையை 22 பேர் திரத்த பூலோகமே வேடிக்கை பார்க்கிறது.. மொக்க பசங்க (நானும் தான்)

 

கூத்து தொடங்கிவிட்டது.. இனி ஒரு மாதத்திற்கு பல குடும்பகளுக்குள் பிரச்சனை தான்..


அப்பா மெய்மறந்திருப்பார் டீவியில்
அம்மாவுக்கு நாடகம் பார்க்க டீவீ இருக்காது
மகளுக்கு மானாட மசிராட ச்சீ..சீ மயிலாட பார்க்க டீவி இருக்காது
குந்தியிருக்கும் கிழவிக்கு சுப்பரபாதம் கேக்க டீவி இருக்காது


இது தான் சாட்டு என்று டீவீ விக்கிறவன் சந்துல சிந்து பாடி 40, 50 டீவி வித்துடுவான் ஊருக்குள்ள..

அதைலயும் பிரச்சனை வரும் வீட்டில பிறகு..
அப்பா உங்கட டீவியில மட்டும் தான்
மானும் மயிலும் ஆடுது
நமீதா குலுக்குறா.. அசின் ஆடுறா
சுகி சிவம் கதைக்கிறார் என்பார்கள்

அப்பர் தானே பிரச்சன அந்த தீர்க்கனும்
இன்னொரு கனேக்கசன் எடுக்கனும்
அது பூட்ட யாரின்ட கால்லயும் விழனும்
அதை விட மாதா மாதம் கட்டித் தொலைக்கனும்
பாவம்டா சாமி ..அப்பன்
ஒரு உருண்டை உருள்ரதை பார்க்கப் போய் அவரின் தலையே உருள்கிறது..

நானும் இந்த உருண்டையை கிட்டத்தட்ட 35 வருடங்கள் உருட்டித் திரிந்தன் தான்.. ஆனால் சற்று அடங்கியிருக்கிறது ஆர்வம் தற்போது. ஆயினும் கடந்து போகும் போது எதிர்பாராமல் இளசுகள் விளையாடும் பந்து அருகில் வந்தால் குழந்தைய் நான்.. இன்றும்.

இப்படி என்ன தான் இருக்கிறது இந்த உருண்டையில்..? உலகமே அடங்கிப்போகிறதே அதற்குள்..
பூமியும் உருண்டை...பந்தும் உருண்டை எதும் சம்பந்தம் இருக்குமோ இவர்களுக்குள்? ஒன்னுமே புரியுதில்லப்பா.

இந்த உருண்டைக்கும் மனித வர்க்கத்துக்கும் அப்படியென்ன தொடர்பிருக்கிறது என்று யோசித்துப்பார்த்தேன்.. எனக்கென்னமோ எல்லாமே இந்த உருண்டைக்குள் இருப்பதாகவே படுகிறது..
சமுதாயம், அன்பு, ஆக்ரோஷம், வலி, இன்பம், துன்பம், பொறாமை, தேடல், பணம், பிணம், வாழ்வு, வெற்றி, தோல்வி, காழ்ப்புணர்ச்சி, இப்படி இல்லாதது என்று ஒன்றுமில்லை இந்த உருண்டையினுள் என்பேன் நான். ஆக மனிதர்கள் இதற்கு ஆட்பட்டு இருப்பதில் தவறில்லை.

கால்பந்திற்கு அவராற்றிய சேவைக்காக Sir பட்டம் பெற்ற Bob Paisley அய்யா அவர்கள் 70களில் Liverpool FC மனேஜராக இருந்த போது இப்படிச் சொன்னார் ஒரு தரம்
"Kevin was quicker off the mark, but Kenny runs the first five yards in his head." Kevin Keegan இன் விளையாட்டையும், Kenny Dalglish இன் விளையாட்டையும் அறிந்தவர்களுக்கு இக் கூற்றின் சூட்சுமம் புரியும்.

Bob Paisleyஅய்யாவின் குரு Bil Shankly அய்யா ஒரு படி மேலே போய் இப்படிக் கூறியிருக்கிறார்:
“Football's not a matter of life and death ... it's more important than that,”

உண்மை தான்...

எனக்கும் அந்த பந்துக்குமான உறவு எப்போ தொடங்கியது என்பது ஞாபகமில்லை. அப்பர் பந்தைமிகச் சிறப்பாக உருட்டித்திரிந்தாராம் வன்ஸ் அபோன் அ டைம். போலீஸ் விளையாட்டுக் குழுவில் இருந்தாராம் என்றேல்லாம் கதை உலாவுகிறது அப்பரின் தாய் வீட்டில்.
ஒரு நாள் அவருடன் பந்தடித்த ஞாபகமும் இருக்கிறது எனக்கு. அவரின் பூட்ஸ், ஸ்டொக்கிங்ஸ் எல்லாம் இருந்தது என்னிடம் ஒரு காளத்தில். ஆக அப்பா தான் நம்ம முதல் குருவாய் இருந்திருக்க வேணும்.

ஏறாவூர் அரசியல்வாதியொருவர் சொல்லுவார் உன் தந்தையிடம் தான் நான் கால்பந்து பழகினேன் என்று.. நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்கமுடியவில்லை அரசியல்வாதியின் விளையாட்டப் பார்த்த பிறகு.

தென்ஆபிரிக்கா லஞ்சம் கொடுத்து இந்தத் திருவிழாவை வாங்கியதாம் என்றெல்லாம் கதைத்தார்கள். ஆரம்பத்தில்.. மறந்துவிட்டார்கள் அதை இப்ப. பெருசுகளுக்கும் மறதி வரும் தானே.

ஒரு வருசத்து முன் நடந்த நரபலித் திருவிழாவையே மறந்து விட்டார்கள்....இது நாலைந்து வருடங்களுக்கு முன் நடந்த விடயமல்லவா.. எப்படி ஞாபகம் இருக்கும்?

எது எப்படியோ

இன்னும் ஒரு மாதத்திற்கு உலகமே மெய் மறந்திருக்கும்
நண்பர்கள் தங்களுக்குள் அடிபட்டுக்கொள்வார்கள்
மறந்து சேர்ந்தும்

 

கொள்வார்கள்

பைன்ட் பைன்ட் ஆக நொதித்த தரவம் வாயால் உட்புகுந்து மூத்திரமாய் வெளிவரும்
மூத்திரம் போற நேரம் பார்த்து தான் கோல் அடிப்பார்கள் விளையாடுபவர்கள்
கோல்ல்ல்ல்ல்ல்
என்ற சத்தம் கேட்டு மூத்திரம் போனவன் ” ஷிப்” பூட்டமறந்தும் ஓடிவருவான்

நொந்து நூலாய்ப் போவார்கள் சில ஆதரவாளர்கள்
கொலையிலும்
முடியலாம்

பனால்டி அடிப்பதை கோட்டை விட்டதால் தூற்றப்படுவான் வீரனொருவன்
அதே பனால்டியை பிடித்தற்காய் கோயிலும் கட்டுவார்கள் கீப்பருக்கு
மனேஜர் வாழ்த்தப்படலாம், திட்டப்பலாம் ஏன் மாற்றப்படவும்
கூடும்

பல ஆயிரம் கோடி விலை பேசுவார்கள் சிலருக்கு

ஆனால் அந்த உருண்டை மட்டும்
உருண்டையாயே இருக்கும்
எதையும் கண்டுகொள்ளாதது
போல..

  

நன்றி:   http://visaran.blogspot.com/

.

 
 

தற்போதய வாசகர்கள்

We have 3 guests online