இன்றைய ஒளியோவியம்

3d-art-0024.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50373
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

என் காதல்!  - சுரபி

 

உலகத்திலேயே
நான் முதலில் காதலிக்கும்
ஒருவரைப் பற்றிச் சொல்லப்போகிறேன்.

 

 

அது வேறு யாருமல்ல.
என்னைத்தான் நான் முதலில்
நேசிக்கின்றேன்.

 

முரண்பாடு உள்ளோரும்
கடவாயில் சிரிப்போரும்
செவிகளை இறுகப் பொத்திக்கொள்ளுங்கள்!
தவறில்லை.

 

என் நடையும், பேச்சும்
செயலும், முகமும்
எனக்கு முக்கியமானவை.

 

காதல் என்று வந்துவிட்ட பின்
உண்மையாயிருத்தல் என்பதை
முதலில் என்னிடம்தான் நான்
செயற்படுத்த முயல்கிறேன்.

 

என் மீது எனக்குள்ள காதலிலிருந்தே
உன்; மீதான
என் நேசம் நகர்கிறது.

 

என்னை நேசிக்கமுடிந்தபின்தான்
சமூகம் தொடர்பான
என் காதல் விரிகிறது

 

என்னை உயரத்தில்
உட்கார்த்திய பின்தான்
பேசவருகிறேன்...
ஆண் பெண் உயர்வு தாழ்வெல்லாம்
எனக்கு அப்புறம்தான்.

 


திமர், அகங்காரம்
என்றாலும் தவறில்லை.
பாதிக்காது.

நான் உண்மை பேச வருகிறேன்.

 

அம்மா, கணவன், மகள்,
நாடு, சனம், வீடு
என்பது எல்லாம்
பத்தோடு ஒன்றுதான் எனக்கு

 

என் அம்மா, என் கணவன், என் மகள்
என் நாடு, என் சனம், என் வீடு
என்பதுவே
காதலைக் காரணம் செய்கிறது.

 

”என்” என்பதுவே இங்கு
எழுந்தாள்கிறது.
அப்படியானால்...

 

நான் என்னை நேசிக்கிறேன்

 

காது முக்கு வாய்
கண் இதர-... இதர... என்று
பொத்துபவர்கள் எல்லாம்
பொத்திச் செல்லுங்கள்...

 

நான் என்னையும்
நீ உன்னையும்தான்
முதலில் காதல் செய்கிறோம்
என்பதே இங்கு நித்யமாகிறது.

...................................

- சுரபி

 

தற்போதய வாசகர்கள்

We have 4 guests online