இன்றைய ஒளியோவியம்

Desert Landscape.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50350
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

Print

நாடுகடந்த தமிழீழக் கூட்டமும் சமுதாயப் பொறுப்புள்ளவர்களின் மௌனமும் -ந.பத்மநாதன்

 

கடந்த 24.01.2010 அன்று நாடுகடந்த தமிழீழ உருவாக்கம் பற்றிய விளக்க கூட்டம் ஒன்று Linserud பாடசாலையில் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே . திருவாளர் உருத்திரகுமாரன் அவர்கள் skype உதவியுடன் ,கேள்விகளுக்கு பதில் கூறு முன்பு , கொள்கை விளக்கம் நடந்தது.

 

 

பின்பு உருத்திர்குமாரனின் ஒரு நீண்ட உரையும் . கேள்வி பதிலும் நடைபெற்றது. அங்கு மக்களவை உறுப்பினரகள் சிலரும் ஆதரவாளர்களும் , வேறு பொதுமக்களும் கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு எல்லோருக்கும் உருத்திரகுமாரன் அவர்கள் போதிய விளக்கத்துடன் பதில் கொடுத்தார். நாடுகடந்த தமிழீழமும் , ஒரே நோக்கத்தைக் கொண்ட வேறு வேறு அமைப்புக்கள் என்றும் - அவை இரண்டும் இயங்கலாம் என்றும் கூறினார் . மற்றும் நாடு கடந்த தமிழீழம் , புலி முத்திரை குத்தப்பட்டவர்களை நேரடியாக ஈடுபட விடாது தனி ஜனநாயக அமைப்பாக இருக்கவேண்டும் என்றும் விரும்பினார் .(இது எனது விளக்கம் - வேறு யாராவது மேலும் விபரமாக் எழுதுங்கள் . விளக்கவுரை எனது நோக்கமும் அல்ல ).     அங்கு மக்களவை ஆதரவாளர்கள் சிலர் குடித்துவிட்டும் குடியாமலும் ஜனநாயக விரோதப்ப் போக்குகளில் ஈடுபட்டதும் கவலைக்குரியதும், கண்டிக்கப்படக்கூடியதும். நான் கூட்டத்திற்கு சென்றது - ஜனநாயக வழியில், வெளியில் உள்ள புலி ஆதரவு அல்லாதோரையும் இணைக்கும்படி வலியுறுத்தவே சென்றேன் . ஆனால் அங்கு நிலமை அப்படி இருக்கவில்லை. ஒரு வயதில் முதிர்ந்த அனுபவசாலி ஒருவர் தலைவர் இறந்தது என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அவரின் எண்ணத்துக்கு உரிய ஜனநாயக உரிமையை மதியாது அவரை தாக்கச் சென்றார்கள். அவர்கள்  தமது தவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன் Norway பத்திரிகை தலைவர் பிரபாகரனின் உடல் என்று ஒரு படத்தை பிரசுரித்து இருந்தார்கள் . பத்திரிகைக் காரியாலயம் முன் சென்று இவர்களால் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா. இது ஒரு ஜனநாயக் நாடு .  ஏனிவர்கள் ஆர்ர்ப்பாட்டம் செய்யவில்லை.?


மற்றும் தேர்தல் குழுவைச் செர்ந்த ஒருவர் நாடுகடந்த தமிழீழ ஆதரவாளர்கள் , தொலைபேசி செய்தி அனுப்பியதாகவும் , தொலை பேசி உரையாடலும் , மற்றும் மின்னஞ்சல் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்தார் .  ஆனால் நவின உலகினில் , தொழில் நுட்பத்தில் பொலிசாராலேயே , எவரது மூலம் என்று கண்டு பிடிக்க முடிவதில்லை . யாரும் யாருடைய IP எண் விலாசத்தை பயன்படுத்தி, பிழையான தகவல்கள் அனுப்பலாம். தேர்தல் குழு நடுநிலமை மீறுவது தவறு .
அவர்கள் குடித்து விட்டோ , அல்லது வேறு முறைகளிலோ எவரது ஜனநாயக் உரிமையையும் பறிக்கவில்லை. தொளை பேசி பேசுவதும் , தனக்கு வந்த தகவலை வேறு நபருக்கு அனுப்புவதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு . தேர்தல் குழு - அவர்களை நோக்கி ஒருவிரலை நீட்டுவது நடுநிலமை மீறிய தவ்று.


திரு.உருத்திரகுமார்ன் அவ்ர்கள் மக்களவைத்தேர்தலை பிற்போட்டு , மாசி மாதத்தில் வைத்தால் , தாங்களும்  முற்போட்டு மாசி மதத்தில் இரண்டு தேர்தல்களையும் வைக்கலாம் என்றும் கேட்டும் இருந்தார். ஆனால் மக்களவை சம்மதிக்கவில்லை . நானும் Veitvet  பாடசாலைக் கூட்டத்தில் , தேர்தலை பிற்போட்டு , எல்லாத் தமிழர்களையும் ஒற்றுமைப்படுத்தி விட்டு பின்பு வைக்கலாம் எனப்பொது மக்கள் சார்பில் கேட்டு இருந்தேன் . தேர்தல் குழு நொண்டிச் சாட்டுகளைக் கூறினார்கள். ஆயிரம் பூக்கள் மலர்ட்டும் , ஆயிரம் கருத்துக்கள் நிலவட்டும் . நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் எல்லாம் எங்களுக்கு வேற்றி கிடைக்கும் . ஒரு வழி அடைத்தாலும் , மற்றக்கதவுகள் திறக்கும் .
முடிவாக

  • பல கலந்துரையாடல்கள் எங்கள் மத்தியில் தேவை.
  • ஜனனாயகப் பண்புகளை மதித்து நடப்போம் .
  • குடும்பத்தில் இருந்து உங்கள் ஜனநாஜகம் உருவாகட்டும்.
  • பேச்சுரிமை , எழுத்துரிமை , நண்பர்களுடன் உரையாடும் உரிமயையை மதிப்போம்.

என்னிலும் பார்க்க . வயது கூடியவ்ர்களும் , ஒஸ்லோவில் பலகாலம் வசித்தவர்களும் திருவாளர்கள் உமைபாலன் , விவேகானந்தன் போன்றொர் கூட்டத்திற்கு  வந்திருந்தார்கள்.  கல்யாணி தயாபரனின் அரங்கேற்ரத்தில் மக்கள் ஒற்றுமையை பற்றி கதைத்த இந்த விமர்சக்ர்கள் மௌனத்தைக் கலைத்து இங்கு நல்ல கருத்துக்கள் கூற வேண்டும் என்பதே எனது அவா.
அரங்கேற்ற விமர்சனம் என்பது , சாதாரண விமர்சனம் . அடுத்த மேடையேற்றத்தில் எல்லோரும் ஒற்றுமையாகி விடுவார்கள் . அது பலரையும் பெரிதாகப் பாதிக்காது . ஆனால் இத்தவறுகள் தமிழ் சமூகத்தை ஒட்டு மொத்தமாகவே பாதிக்கும்.

ஒற்றுமை வேண்டி
ந.பத்மநாதன்

 

தற்போதய வாசகர்கள்

We have 8 guests online